வெள்ளி, மார்ச் 18, 2011

அடுத்த முதல்வர் யார்? நேற்றைய தொடர்ச்சி...

கடந்த பதிவில் அதிமுகவை பற்றி சற்று விரிவாக சொல்லியிருந்தேன். இந்த பதிவில் திமுக, அதிமுக கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், யார் 2011 முதல்வர் என்பதையும் இப்போது விரிவாக பாப்போம்.

கடந்த வியாழகிழமை வெளியான ஆனந்த விகடனில் 'மரியாதை மனிதர்களின் மார்க்' என்ற பகுதி வெளியாகியிருந்தது. அதில் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் பற்றி சில முக்கிய பிரமுகர்களிடம் மார்க் போட்டிருந்தார்கள். அதில் கருணாநிதி 46 மார்க்கும், ஜெயலலிதா 41 மார்க்கும் பெற்றிருந்தார்கள். அந்த கட்டுரையில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் எதிராக உள்ள அனைத்தும் சத்தியமான உண்மை.

காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கிய திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் உள்ள தனது மாவட்ட முக்கிய பதவியில் இருக்கும் தொண்டர்களை அழைத்து 'உங்கள் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளோம். நீங்கள் கட்சி கேட்டுக்கொள்ளும் பொருட்டு அவர்களுக்காக வேலை செய்வீர்களா? இல்லையென்றால் பரவாயில்லை. அப்படி செய்திர்களானால் பிற்காலத்தில் உங்களுக்கு கட்சியில் ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்று பதவியளிக்கிறோம்' என்று கூறியுள்ளது. கட்சி உடன்பிறப்புக்களோ 'நம்மையும் ஒரு மனிதராய் மதித்து கேட்கிறார்களே, கண்டிப்பாக செய்யலாம்' என்று தேர்தல் களத்தை முன்பைப்போல உற்சாகத்தோடு எதிர்நோக்கியுள்ளனர். இது தான் அம்மா செய்ய தவறியது. இதை அதிமுக செய்திருந்தாலே அவருக்கு கட்சி தொண்டர்களிடத்தில் நல்லா பெயர் கிடைத்திருக்கும்.

நேற்று விஜய்காந்தும் மற்ற கட்சியினரும் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்க போவதாக வந்த செய்தியை கேட்டு பலர் புருவம் உயர்த்தியிருக்க கூடும். 'விஜயகாந்த் ஒரு அசுர சக்தியாக மாறும் நேரம் இது' என்று பல அரசியல் பார்வையாளர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு.
அதிமுக, கூட்டணி கட்சியினரை மதிக்காமல் நடந்துகொண்டால் அது கட்சியின் தற்கொலைக்கு சமம் என்று ஒரு முக்கிய ஆலோசகர் அம்மாவிற்கு எடுத்து கூறினார். அதை எற்றுக்கொண்டு மதிமுக மற்றும் பிற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ளார் அம்மா.
இது ஒரு புறமிருக்க, முன்னர் அதிமுக அறிவித்த வேட்பாளர்களின் பட்டியலில் உள்ள தொகுதிகளைத்தான் அம்மா கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிரித்து கொடுத்துள்ளார். அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அந்ததந்த அதிமுக வேட்பாளர்களின் கதி? அவர்கள் கோபப்பட்டு வாக்கை எதிரணிக்கு கொடுத்தால்?

கடந்த ஆட்சியில் திமுக அரசு மக்களுக்கு என்னென்ன செய்தது என்பதை கடந்த பதிவில் தெளிவாக எழுதியிருந்தேன். ஆனால் அதிமுக 2001 - 2006 வருட ஆட்சி காலத்தில் என்னென்ன செய்ய கூடாதோ அனைத்தையும் செய்தது. ஸ்டாலின் கட்டிய மேம்பாலங்களை இடித்து பார்த்தது, கடற்கரையில் கம்பிரமாக நின்றிருந்த கண்ணகி சிலையை அகற்றியது, தேவையில்லாத சட்டங்களான மதமாற்ற தடை, ஆடு, கோழிகளை பலியிட தடை சட்டங்களை கொண்டுவந்தது, ஒரே சமயத்தில் 1500 அரசாங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அரசு பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தம் என்று சொல்லி கொண்டே போகலாம். அம்மா ஆட்சியில் என்ன தான் செய்தார் என்று எண்ணி பார்த்தால், ஒன்றுமே இல்லையே. 'கலைஞரின் குடும்ப எல்லா இடத்திலும் ஆதிக்கம் செய்கிறது' என்று சொல்லும் இந்த அம்மா தான், சசிகலாவின் உறவினரான சுதாகரனுக்கு நாடே வியக்கும் வகையில் கோலாகலமாக திருமணம் நடத்தினார். இத்தனைக்கும் சுதாகரன் இவருக்கு உறவினர் கூட இல்லையே. இதை என்னவென்று சொல்வது?

ஆக ஒருவழியாக கூட்டி கழித்து பார்த்தால், அடுத்த முதல்வர் யார் என்று சரியாக கணிக்க முடியவில்லை. காரணம், நம் தமிழக மக்கள் தான். நாம் இவர் வருவார் என்று கூறி பின்பு வேறொருவர் வந்தாலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நானும் 'மக்கள் தீர்ப்பே மகேசன் திறப்பு' என்று நம்பும் ஒரு சாதாரண தமிழன் தான். பொறுத்திருந்து பார்த்து எதிர்நோக்குவோம், மே 13 ஆம் தேதிக்கு பிறகு.


வாக்காள பெருமக்களுக்கு:
தேர்தலன்று காலையில் எழுந்து, குளித்து வாக்கு சாவடிக்கு சென்று எந்த வரிசையில் நிற்கவேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டு வாக்களித்துவிட்டு வருகிறிர்கள். ஆனால் இந்த வேலைகளை செய்யும் நேரங்களில் கண்டிப்பாக ஒரு அரை மணிநேரம் நீங்கள் ப்ரீயாக இருக்கலாம். அந்த நேரத்திலாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சரியாக யோசித்து முடிவு செய்யுங்கள். நீங்கள் யோசிக்கும் அந்த அரைமணி நேரம் தான் அடுத்த ஐந்தாண்டை தீர்மானிக்க போகிறது. நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களின் பேச்சுக்கோ, தைரியத்துக்கோ அபிமானியாக இருக்கலாம். ஆனால் உங்கள் தலைவர் இந்த நாட்டிற்கு அபிமானியாக இருக்கிறாரா என்று தெரிந்து ஒட்டு போடுங்கள். அட அவர் நாட்டின் அபிமானியாக இல்லையென்றாலும் பரவாயில்லை, நாட்டு மக்களாகிய நமக்கு அடிப்படை தேவைகளை செய்பவராக இருந்தாலே போதும். அவருக்கு போடலாம் நம் விலைமதிப்பற்ற ஓட்டை.






(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

8 கருத்துகள்:

  1. நல்ல அலசல் நண்பா.. யாருக்கு ஓட்டுப் போட்டாலும் ஒரே நிலைதான்..

    பதிலளிநீக்கு
  2. Very Good Analysis! Final touch is great!! People should know the value of their Vote!! ;-))

    பதிலளிநீக்கு
  3. ///நல்ல அலசல் நண்பா.. யாருக்கு ஓட்டுப் போட்டாலும் ஒரே நிலைதான்..///

    (பதிவுலகில் பாபு).

    நன்றி பாபு. உங்கள் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. //RVS சொன்னது…
    Very Good Analysis! Final touch is great!! People should know the value of their Vote!! ;-))//

    Thank you Mr. RVS. I Agree your Words.

    பதிலளிநீக்கு
  5. கருணாநிதி ஒழிந்தால்தான் தமிழகம் விளங்கும்.......மக்களை காப்பாற்றுங்கள்.....இல்லை என்றால் தமிழகம் மேலும் சுரண்டப்படும் ................கடைசியில் தமிழர்களை அடிமைகளாய் மாற்றிவிடுவார்கள்......................

    பதிலளிநீக்கு
  6. குறைந்த மதிப்பெண்ணுக்கு (ஜெயலலிதா) இத்தனை ஓட்டுகள் விழுந்தது எதனாலோ ?

    பதிலளிநீக்கு