இந்த முறை இந்தியா வந்திருந்தபோது ஒரு சின்ன குறை மனதில் நிறைந்திருந்தது. 'நாற்பது நாட்கள் விடுமுறையில் வந்திருக்கிறோம். புத்தகத் திருவிழாவும் இருந்தா பார்க்கலாமே' என்ற ஆசை. 2015 டிசம்பர் மழை வெள்ளத்தால் 2016 ஜனவரியில் நடக்கவேண்டிய 39 வது புத்தகத் திருவிழா, ஜூலையில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.