செவ்வாய், டிசம்பர் 31, 2013

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி...

கடந்த பதிவில் இந்தாண்டு ஹிட்டான 10 படங்களை பார்த்தோம். இந்த பதிவில் மீதம் இருக்கும் 10 படங்களை பார்க்கலாம்.

 விஸ்வரூபம்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 1
 நடிகர் கமல்ஹாசனின் இயக்கத்தில், தயாரிப்பில் மற்றும் நடிப்பில் வெளிவந்த படம். முஸ்லிம்களின் போராட்டம், தமிழக அரசு தடை என்று படம் கோர்ட் வரைக்கும் போய் வெளிவந்தது. படத்திற்கு இருந்த எதிர்ப்புகளே, ரசிகனின் எதிர்பார்ப்பை கிளப்பியபடியால், படத்திற்கு ஒப்பனிங் பிரம்மாண்டமாக அமைந்தது. படத்தின் Making, காட்சியமைப்பு, Locations என்று படம் வேறு லெவலில் இருந்தது. படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால், 'அபாரம்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும். சீக்கிரம் கமல் சார், 'Iam Waiting'.

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013...

இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இன்று வரை பல படங்கள் தமிழில் வெளியாகின. அதில் சில படங்கள் சூப்பர் ஹிட், சில படங்கள் சுமார். நாம் பார்க்கப்போவது இந்த இரண்டு வகை படங்களை தான். அதற்க்கு முன்பு அனைவருக்கும் Advance புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் 2014 நம் அனைவருக்கும் சிறந்த ஆண்டாக இருக்கவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

 சூது கவ்வும்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 1
 'Black Comedy' படம். விஜய் சேதுபதி, சஞ்சிதா ரெட்டி, M. S. பாஸ்கர் மற்றும் பலர் நடித்து ஹிட்டடித்த படம். இன்னும் சொல்லப்போனால், இந்த வருடத்தில் வெளிவந்த பல காமெடி படங்களுக்கு இதுவே முன்னோடி. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல 'Bench Mark' இந்த 'சூது கவ்வும்'.

திங்கள், செப்டம்பர் 16, 2013

கே. பாக்யராஜின் 'இன்று போய் நாளை வா' (1981) - திரை விமர்சனம்

கே. பாக்யராஜின் 'இன்று போய் நாளை வா' (1981) - திரை விமர்சனம் 1
தமிழ் சினிமா இன்று பல துறைகளில் எவ்வளவோ முன்னேறிவிட்டது. நடிகர், நடிகையர்களில் இருந்து, தொழில் நுட்பங்கள் வரைக்கும் தமிழ் சினிமாவின் வளர்ச்சி அபரிமிதமானது. ஆனாலும், முந்தய தமிழ் சினிமாவில் இருந்த சில அடிப்படை விஷயங்கள் இன்று கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை. அதில் மிக முக்கியமானது, கதை இலாகாவும், கதாசிரியர்களும் தான். பழைய

சனி, ஆகஸ்ட் 10, 2013

வேலை கிடைச்சிரிச்சி...

 இது நடந்தது கடந்த ஆண்டு நவம்பர் மாத முதல் வாரம். எப்பவும் போல அன்று காலை எங்கள் கம்பெனியின் ஈமெயில் பார்த்தபோது ஒரு அதிர்ச்சியான செய்தி, எங்கள் முதலாளியிடமிருந்து வந்திருந்தது. வழக்கம் போல ஏதாவது உப்பு சப்பில்லாத மெயில் என்று தான் நினைத்தோம். ஆனால், வந்த மெயில் அதுவல்ல. இந்த நவம்பர் மாதத்தோடு தான் கம்பெனியை