கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிறது, சென்னையை ஆற, அமர பார்த்து. 2012 இல் என் திருமணத்திற்காக 45 நாட்கள் விடுமுறையில் வந்திருந்தேன். அதன் பிறகு இரண்டு முறை வந்திருக்கிறேன். ஆனால், ஒரு வாரம், இருபது நாள் என்று மரங்களை கடக்கும் ரயில்கள் போல நாட்கள் வேகமாக ஓடிவிடும்.