
அருமையான திரைக்கதையால் வெற்றி பெற்றிருக்கின்றன. அதே சமயம் நல்ல கதைகள் கூட மோசமான திரைக்கதையால் திரைப்படங்கள் படு தோல்வியடைந்திருக்கின்றன. இந்த இரண்டு வகையான விஷயங்களில் இருந்து மாறுபட்டு நிற்கிறது நம் கே.பாக்யராஜ் படங்கள். இவர் இயக்கிய படங்களில் இது தான் சிறந்தது என்று ஒருவராலும் சரியாக சொல்லமுடியாது. ஏனென்றால் அவர் இயக்கிய அனைத்து படங்களும் மாஸ்டர் பீஸ். அவரின் மாஸ்டர் பீஸ் படங்களிலிருந்து நான் விமர்சிக்கப்போவது 'தாவணிக் கனவுகள்'.

சுப்ரமணியாக பாக்யராஜ். ஆரம்ப காட்சிகளிலிருந்தே படத்தை தன்னுடைய அப்பாவியான நடிப்பால் கொண்டு செல்கிறார் இவர். அதுவும் குடித்துவிட்டு தன் வீட்டிற்கு வந்து இவர் பண்ணும் அலப்பறை செம. தங்கைகளின் வாழ்க்கைக்காக கலங்கும் அண்ணனான இவரின் நடிப்பு இவருக்கு கச்சித பொருந்துகிறது. அதே சமயம் சென்னைக்கு வந்து கடத்தல், ரஜினி போல் சினிமாவில் நடிப்பது, லாட்டரி டிக்கெட் என்று லிஸ்ட் போட்டு முயற்சி செய்து கையை சுட்டுக்கொள்வது செம காமெடி.


இந்த படத்திற்கு இசை நம் இசை ஞானி. மிக அருமையாக இசையமைத்துள்ளார். குறிப்பாக 'ஒரு நாயகன் உதயமாகிறான்' பாடல் இன்றும் கேட்க மற்றும் பார்க்கத்தூண்டும். 'நீங்களா எடுத்தா திருட்டு நானா கொடுத்தா திருப்தி', 'நான் கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்கேன், அந்த தேதியில வளைகாப்பு நடத்தலாம்னு சொல்லுறியே?' போன்ற வசனங்கள் எனக்குத் தெரிந்து பாக்யராஜால் மட்டுமே எழுதமுடியும். இவர் ஒரு சிறந்த வசனகர்த்தா என்பதற்கு இது வெறும் சாம்பிள் மட்டும் தான். எந்த ஒரு இடத்திலும் சிறு தோய்வு கூட இல்லாமல் படத்தை அருமையாக எடுத்திருக்கிறார். படத்தை தயாரித்தது பாக்யராஜின் 'பிரவீனா பிலிம்ஸ் லிமிடெட்'. இந்த படம் 1984, செப்டம்பர் 14 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இன்று ரீமேக் செய்யலாம், ஆனால் பாக்யராஜ் போல் நடிப்பதற்கு இன்று எந்த நடிகரும் இல்லை. That is Bakyaraj Style...
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
// அதே சமயம் சென்னைக்கு வந்து கடத்தல், ரஜினி போல் சினிமாவில் நடிப்பது, லாட்டரி டிக்கெட் என்று லிஸ்ட் போட்டு முயற்சி செய்து கையை சுட்டுக்கொள்வது செம காமெடி. //
பதிலளிநீக்குஎனக்கும் பிடித்த காட்சி...
// பாக்யராஜின் கடைசி தங்கையாக வரும் இன்றைய டிவி நடிகை பிரியதர்ஷினி //
பதிலளிநீக்குபுதிய தகவல்...
நல்ல விமர்சனம்..
பதிலளிநீக்குநிஜமா சொல்லுங்க பாஸ், இந்தப் படத்துக்கு சிவாஜி தேவையா? ஒரு தேங்காய் சீனிவாசன், நாகேஷ் யாராவது இருந்தா பத்தாதா?
பதிலளிநீக்குதிரையரங்கில் படம் பார்க்கும்[போது காச உருட்டி விடுவாரே அந்தக் காட்சி.., அதில் முத்தாய்ப்பாக கடைசித்தங்கை அவருக்கு அண்ணே காச உருட்டிவிட மறந்திட்டீங்க என்று சொல்லும் காட்சி,,
பதிலளிநீக்குசார் எனக்கு ஃபைட் தெரியும் சார் என்று கண்கள் கலங்க கோபமாகச் சொல்லும் காட்சி
பதிலளிநீக்குகடைசிக் காட்சியில் ராதிகாவின் பேச்சைக் கேட்டு ம்லைத்துப் போய் நிற்கும் காட்சி
பதிலளிநீக்குபழைய நினைவுகள்...
பதிலளிநீக்குகாலத்தால் அழியாத காவியம்..
தங்கள் பார்வையில் அசத்தல்...
நல்லா இருக்கு நண்பா...
பதிலளிநீக்குநல்ல story
பதிலளிநீக்கு