வியாழன், ஏப்ரல் 17, 2014

மனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள்...

இந்த வருடம் தொடங்கியதிலிருந்தே பல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்று இல்லாமல் புதுமுக இயக்குனர்கள் பலர் இந்த வருட ஆரம்பத்திலிருந்தே நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் நான் பெரிதாக எதிர்பார்த்த சில படங்கள், என்னை கடுப்பெற்றியதேன்னவோ உண்மை. அதே சமயம், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நான் பார்த்த சில படங்கள், என்னை வெகுவாக கவர்ந்ததும் உண்மை. அந்த படங்களை தனித்தனியாக பதிவெழுதலாம் என்று ஆசை தான். ஆனால் நேரமின்மை காரணமாக 5 படங்களையும் இந்த ஒரே பதிவில் எழுதுகிறேன்.

கோலி சோடா:

செவ்வாய், ஏப்ரல் 08, 2014

மை டியர் Blacky...

 2002. ஏப்ரல் 14 என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டிற்க்கு இரண்டு நாய் குட்டிகளை கொண்டு வந்தாள் என் தங்கை. ஒன்று பிரவுன் கலர், மற்றொன்று ப்ளாக் கலர். அதனால் அதன் பெயர்களை கூட Blacky, Browny என்றே பெயர் வைத்து வளர்க்க ஆரம்பித்தோம். நாய் வளர்ப்பது ஒன்றும் எங்களுக்கு

திங்கள், ஜனவரி 27, 2014

பாட்டி வீட்டு ஞாபகங்கள்...

பாட்டி வீட்டு ஞாபகங்கள் 2
இன்றைய உலகம் பேய்த்தனமான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதன் அந்த வேகத்திற்கு தன்னை ஒப்படைத்துவிட்டு, ஜடமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதில் நானும் ஒருவன் தான். படிக்கும் நீங்களும் ஒருவர் தான். ஆனாலும், திடீரென்று ஒரு சில ஓய்வுகள் கட்டாயம் அனைவருக்கும்

ஞாயிறு, ஜனவரி 12, 2014

தலயின் 'வீரம்' - திரை விமர்சனம்...

தலயின் 'வீரம்' - திரை விமர்சனம் 1
 வீரம் படத்தை பற்றி பலர் பலவிதமாக பதிவெழுதி விட்டார்கள். So, புதிதாக எழுதுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லையென்றாலும், படத்தில் ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 'கிராமத்து கெட்டப்பில் அஜித்தா? அஜித்தை வைத்து மாஸ் கமர்ஷியல் படமா? முடியுமா?' என்று பலர் யோசித்த கேள்விகளுக்கு சத்தமே இல்லாமல் படம் எடுத்து, பெரிய

செவ்வாய், டிசம்பர் 31, 2013

எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி...

கடந்த பதிவில் இந்தாண்டு ஹிட்டான 10 படங்களை பார்த்தோம். இந்த பதிவில் மீதம் இருக்கும் 10 படங்களை பார்க்கலாம்.

 விஸ்வரூபம்:
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் 2013 தொடர்ச்சி 1
 நடிகர் கமல்ஹாசனின் இயக்கத்தில், தயாரிப்பில் மற்றும் நடிப்பில் வெளிவந்த படம். முஸ்லிம்களின் போராட்டம், தமிழக அரசு தடை என்று படம் கோர்ட் வரைக்கும் போய் வெளிவந்தது. படத்திற்கு இருந்த எதிர்ப்புகளே, ரசிகனின் எதிர்பார்ப்பை கிளப்பியபடியால், படத்திற்கு ஒப்பனிங் பிரம்மாண்டமாக அமைந்தது. படத்தின் Making, காட்சியமைப்பு, Locations என்று படம் வேறு லெவலில் இருந்தது. படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொன்னால், 'அபாரம்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும். சீக்கிரம் கமல் சார், 'Iam Waiting'.